Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆலந்தூர் சாலை மேம்பாலம் டிசம்பர் 11-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்: துணை முதல்வர் தகவல்

Print PDF

தினமணி 23.11.2009

ஆலந்தூர் சாலை மேம்பாலம் டிசம்பர் 11-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்: துணை முதல்வர் தகவல்

சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின். உடன் (இடமிருந்து)

சென்னை, நவ. 22: சென்னை சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை மேம்பாலம், ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை, செனடாப் சாலை மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி டிசம்பர் 11-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் என்று துணை முதல்வர் மு.. ஸ்டாலின் தெரிவித்தார்.

சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 9.3 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 420 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் இருவழிப் போக்குவரத்தைக் கொண்டதாகும்.

இதுபோல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 8.89 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 310 மீட்டர் நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை இருவழிப் போக்குவரத்தைக் கொண்டதாகும்.

செனடாப் சாலை -டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் ரூ. 19.93 கோடி செலவில், இருவழிப் போக்குவரத்தைக் கொண்ட 420 மீட்டர் நீளமுடைய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

இந்த இரண்டு மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதையை டிசம்பர் 11-ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

ரூ. 51 கோடி செலவில் பெரம்பூர் மேம்பாலமும், ரூ. 10.55 கோடி செலவில் மணியக்கார சத்திரத் தெருவில் உள்ள ரயில்வே சந்திப்பின் குறுக்கே வாகன சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் ரயில்வே சந்திப்பின் குறுக்கே ரூ. 15.75 கோடி செலவில் மேம்பாலமும், வில்லிவாக்கம் ரயில்வே சந்திப்பில் ரூ. 13.39 கோடி செலவில் வாகன சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

Last Updated on Monday, 23 November 2009 06:37
 

மதுரை நகரில் உள்ள சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 18.11.2009

 

மழையால் சேதமடைந்த சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும்

Print PDF

தினமணி 18.11.2009

மழையால் சேதமடைந்த சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும்

மதுரை, நவ. 17: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கனமழையால் சேதமடைந்துள்ள சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும் என்று, மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 67, 68-வது வார்டு பழங்கானத்தம் பகுதிகளில் மேயர் ஜி. தேன்மொழி, ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வதேச அளவில் சாலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, நகரில் 40 சதவீதம் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட வேண்டியுள்ளதால், இப்பணிகள் நிறைவுபெற்ற பின் சாலை அமைக்கும் பணி துவங்கும்.

எனவே, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் விரைவில் இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மூலக்கரை மயானம், ரோட்டரி சங்கம் மூலம் பராமரிக்கப்பட உள்ளது. இது விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

கடந்த 2 நாள்களாக மேயர், துணைமேயர் ஆய்வு செய்த 29-வது வார்டு பகுதிகளில், மேயரிடம் தெரிவிக்கப்பட்ட அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்தில் வாரம் 2 வார்டுகள் வீதம் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றார் செபாஸ்டின். பின்னர், மேயர் கூறியதாவது: பாதாளச் சாக்கடையில் இருந்து நீர் நிரம்பி, வீடுகளுக்குள் கழிவுநீர் வருவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இப்பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து பாதாளச் சாக்கடையை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.சி. தெரு பின்புறம் உள்ள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை உடனடியாக அகற்றவும், அவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பழங்கானத்தம் சாவடித் தெருவில் குடிநீர் குழாய் தாழ்வாக இருப்பதால், சாக்கடை நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர்க் குழாயை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முனியாண்டிபுரத்தில் உள்ள சத்துணவு மையத்தில் பழுதடைந்துள்ள ஓடுகளை சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மேயர்.

தொடர்ந்து, மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பரிசீலித்த மேயர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Last Updated on Wednesday, 18 November 2009 08:39
 


Page 158 of 167