Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினத்தந்தி              21.08.2013

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

http://www.dailythanthi.com/dt/sites/default/files/pictures/roadwork.jpg

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் விசாலாட்சி தெரிவித்தார்.

மக்களை தேடி மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒட்டு மொத்த சிறப்பு துப்புரவுபணி, மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் 30–வது வார்டு கேத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் அ.விசாலாட்சி தலைமை தாங்கினார்.

கமிஷனர் செல்வராஜ், துணைமேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர நல அதிகாரி செல்வக்குமார் வரவேற்றார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் மனுக்களாக கொடுத்தனர். அவற்றைபெற்றுக்கொண்ட அவர், விரைவில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

ரூ.46 கோடி

நிகழ்ச்சியில் மேயர் விசாலாட்சி பேசும் போது கூறியதாவது:–

திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 1¾ஆண்டுகளில் ரூ.150 கோடியை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளும் அடிப்படை வசதி, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் கடந்த 1¾ ஆண்டில் 30–வது வார்டு பகுதியில் மட்டும் ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி பகுதியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

மழைநீர் சேகரிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் 4,500 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்டி வரி செலுத்தாதவர்களுக்கு உடனடியாக வரி போடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்சேகரிப்பு அமைக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து திருப்பூர் மாநகராட்சியை வளர்ச்சி அடைந்த மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர் சபரீஸ்வரன், நிலைக்குழு தலைவர்கள் பட்டுலிங்கம், பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

தர­மணி சாலை­க­ளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்­பீடு

Print PDF
தினமலர்               06.08.2013

தர­மணி சாலை­க­ளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்­பீடு


சென்னை: தர­மணி சி.பி.டி., வளா­கத்தில், மோச­மாக உள்ள சாலை­களை சீர­மைக்க, மாந­க­ராட்சி 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்­பீடு தயா­ரித்து உள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் பயன்­ப­டுத்தும் தர­மணி சி.பி.டி., வளாக நான்­கா­வது சாலை குண்டும், குழி­யு­மாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த மூன்­றா­வது சாலை மட்­டும், ஜனா­தி­பதி வரு­கை­யை­யொட்டி, இர­வோடு இர­வாக சீர­மைக்­கப்­பட்­டது.

இதனால், அந்த மக்கள் அதி­ருப்­தியில் உள்­ள­தா­கவும், ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட போவ­தா­கவும், ‘தின­மலர்’ நாளி­தழில் நேற்று படத்­துடன் கூடிய விரி­வான செய்தி ெவளியா­னது. பணிகள் துவங்­கப்­படும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது. இது குறித்து மாந­க­ராட்சி கமி­ஷனர் விக்ரம் கபூர் வெளி­யிட்ட அறி­விப்பு:

சி.பி.டி., வளா­கத்தில் உள்ள அனைத்து சாலை­களும், தொழில்­நுட்ப கல்­வித்­துறை கட்­டுப்­பாட்டில் உள்­ளது. இந்த வளா­கத்­தினுள், 1 முதல், 4 குறுக்கு சாலை­களும், இரண்­டா­வது பிர­தான சாலையும் உள்­ளன. இங்­குள்ள மூன்­றா­வது குறுக்கு சாலை, ஜனா­தி­பதி வரு­கையை முன்­னிட்டு, தொழில்­நுட்ப கல்­வித்­துறை கமி­ஷனர் கோரிக்­கைக்கு ஏற்ப, மாந­க­ராட்­சியால் புதுப்­பிக்­கப்­பட்­டது.

இதர சாலை­க­ளையும் புதுப்­பிக்க தொழில்­நுட்ப கல்­வித்­துறை கமி­ஷனர் இன்று (நேற்று) மாந­க­ராட்­சிக்கு கடிதம் எழு­தி­யுள்ளார். அதன் அடிப்­ப­டையில் அனைத்து சாலை­க­ளையும் புதுப்­பிக்க, 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. ஜனா­தி­பதி வருகை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முடிந்த பின், இதர சாலைகள் அனைத்தும் புதுப்­பிக்­கப்­படும். இவ்­வாறு அறி­விப்பில் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.
 

ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.1½ கோடியில் 546 தெரு விளக்குகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி              02.08.2013

ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.1½ கோடியில் 546 தெரு விளக்குகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 156, 157, 158, 160, 161, 163, 164, 166 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் 546 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெரு விளக்குகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டலக்குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

மண்டல உதவி கமிஷனர் சிவஞானம், செயற்பொறியாளர்கள் அன்பழகன், மகேசன், சென்னை மாநகராட்சி மின்சார துறை உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 161–வது வட்ட மாநகராட்சி கவுன்சிலர் ஆலந்தூர் வேம்பரசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு 546 தெரு விளக்குகளையும் இயக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் வி.கோபாலகிருஷ்ணன், ஹேமாபரணிபிரசாத், கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.புருஷோத்தமன், என்.தனசேகரன், வாணுவம்வரதன், எம்.பி.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 22 of 167