Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கம்

Print PDF
தினகரன்               03.05.2013

சாலை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கம்


சென்னை: மாநகராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு இடையே மாநகர சாலைகளை அழகுபடுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் படி சாலை அழகுபடுத்தும் திட்ட தொடக்கவிழா, ஈ.வி.கே.சம்பத் சாலையில் நேற்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் மேத்தா, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் பங்கேற்றனர்.

ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை, வேப்பேரி ஹைரோடு, ராஜா முத்தையா சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காந்தி இர்வின் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, ராஜா அண்ணாமலை ரோடு, நாராயண குரு சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலக சாலை, பாந்தியன் சாலை, வானல்ஸ் ரோடு ஆகிய சாலைகளை கூட்டமைப்பு பராமரிக்கும்.
 

சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்பு பணிகளில் தனியார் நிறுவனம் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி               03.05.2013

சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்பு பணிகளில் தனியார் நிறுவனம் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்


சென்னை மாநகரில் உள்ள சில பேருந்து சாலைகளை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு சுத்தம் செய்து சில நிபந்தனைகளுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கிரடாய் (CREDAI) சங்கத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இச்சங்கம் சென்னை மாநகரின் 5–வது மண்டலத்திற்கு உள்பட்ட, ஈ.வி.கே சம்பத் சாலை, ஜோதி வெங்கடாச்சலம் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை, காந்தி இர்வின் சாலை, போலிஸ் கமிஷனர் ஆபிஸ் சாலை, பாந்தியன் சாலை, வேனல்ஸ் சாலை மற்றும் 7–வது மண்டலத்திற்கு உள்பட்ட புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, ராஜா அண்ணாமலை சாலை, நாராயண குரு சாலை ஆகிய சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.

இதற்கான தொடக்க விழாவையொட்டி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சாலைகளின் பராமரிப்பு பணியினை நேற்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், கூடுதல் கமிஷனர் பிரஜேந்திர நவ்நீத், கிரடாய் சங்கத்தலைவர் சந்தீப் மேத்தா, செயலாளர் சுரேஷ் கிரிஷன், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கவிழா

Print PDF

தமிழ் முரசு       02.05.2013

சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கவிழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்ட தொடக்க விழா ஈ.வி.கே.சம்பத் சாலையில் நடந்தது.

சென்னை மாநகராட்சி மற்றும் ‘ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு’ ஆகியோர் இடையே சென்னை மாநகர சாலைகளை அழகு படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சாலை அழகுபடுத்தும் திட்ட தொடக்கவிழா சென்னை ஈ.வி.கே.சம்பத் சாலையில் இன்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்து சாலை அழகுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் மேத்தா, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சாலை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜோதி வெங்கடாச்சலம் சாலை, வேப்பேரி ஹைரோடு, ராஜா முத்தையா சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காந்தி இர்வின் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, ராஜா அண்ணாமலை ரோடு, நாராயண குரு சாலை, போலீஸ் கமிஷ்னர் அலுவலக சாலை, பாந்தியன் சாலை, வானல்ஸ் ரோடு ஆகிய சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை கூட்டமைப்பு ஏற்றுள்ளது. இந்த சாலைகளில் உள்ள நடைபாதைகளை சுத்தம் செய்தல், சென்டர் மீடியனை சுத்தம் செய்தல், சென்டர் மீடியன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தல் போன்ற பணிகளை அந்த கூட்டமைப்பு மேற்கொள்ளும்.

 


Page 27 of 167