Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பெரம்பலூரில் நவீன ஹைட்ராலிக் எந்திரம் மூலம் மின்விளக்குகள் சீரமைப்பு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

பெரம்பலூரில் நவீன ஹைட்ராலிக் எந்திரம் மூலம் மின்விளக்குகள் சீரமைப்பு


பெரம்பலூர் நகராட்சி பகுதியில் நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணியை கொண்டு மின்விளக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணி

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகளை சரிசெய்து சீரமைக்கும் பணி நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணியை கொண்டு நடை பெற்று வருகிறது. பாலக்கரை வளைவு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை யிலான சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சோடி யம் விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெறுவதை கலெக் டர் தரேஷ் அகமது பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித் ததாவது:

2 ஆயிரத்து 491 விளக்குகள்

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 417 சோடியம் விளக் குகள், 48 நவீன எல்.ஈ.டி. விளக்குகள், 2 ஆயிரத்து 26 குழல் விளக்குகள் உட்பட மொத்தம் 2ஆயிரத்து 491 விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த விளக்கு களில் பழுது ஏற்பட்டால் இதுவரை மர ஏணிகளை பயன்படுத்தி சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது தெருவிளக்கு சீரமைப்பு பணிகளை மேற் கொள்வதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வாகனத்தில் பொருத்தப்பட்ட, ஹைட் ராலிக் மூலம் இயங்கும் நவீன எந்திர ஏணி வாங்கப் பட்டுள் ளது. இதனைக் கொண்டு எளிதாக தெருவிளக்குகள் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள இயலும்.

78 சதவீதம்

தற்போது நகரில் உள்ள மொத்த தெருவிளக்குகளில் 78 சதவீத விளக்குகள் சீரமைக்கப்பட்டு ஒளிர்ந்து வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்குள் நகரில் உள்ள அனைத்து விளக்குகளும் சீரமைத்து ஒளிர வைக்க பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

யார்யார்?

இந்த ஆய்வின்போது நகராட்சி தலைவர் சி.ரமேஷ், நகராட்சி ஆணையர் குருசாமி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, பணி மேற் பார்வையாளர் குமரன் உள் பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

நகராட்சிப் பகுதியில் மின்விளக்கு சீரமைப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி       04.04.2013

நகராட்சிப் பகுதியில் மின்விளக்கு சீரமைப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு


பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில், நவீன ஹைட்ராலிக் இயந்திர ஏணி மூலம் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் பாலக்கரை வளைவு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் விளக்குகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்ட ஆட்சியர் கூறியது:

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 417 சோடியம் விளக்குகள், 48 நவீன எல்.ஈ.டி விளக்குகள், 2,026 குழல் விளக்குகள் (டியூப் லைட்) உள்பட மொத்தம் 2,491 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, இந்த விளக்குகளில் பழுது ஏற்பட்டால் ஏணிகளை பயன்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தெருவிளக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் மூலம் இயங்கும் நவீன இயந்திர ஏணி வாங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எளிதாக தெரு விளக்குகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இயலும். தற்போது நகரில் உள்ள மொத்த தெரு விளக்குகளில் 78 சத விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் நகரில் உள்ள அனைத்து விளக்குகளும் சீரமைக்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சி.ரமேஷ், நகராட்சி ஆணையர் குருசாமி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் குமரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி

Print PDF
தினமணி       03.04.2013

நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி


கோத்தகிரி மார்க்கெட் அருகே பேரூராட்சி சார்பில் ரூ.20 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் நடைபாதை மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

கோத்தகிரி மார்க்கெட் மற்றும் காமராஜர் சதுக்கத்தை மையமாகக் கொண்டு புனித மரியன்னை மகளிர் பள்ளி, கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி, அந்தோணியார் நடுநிலைப் பள்ளி, ஹோம் மெட்ரிக் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கோத்தகிரி-கோவை பிரதான சாலையாக இப்பகுதி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதனால் சாலையை கடக்க மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து நடைபாதை மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்பாலம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள கோத்தகிரி வந்த மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மார்க்கெட் அருகே நடைபெற்றுவரும் மேம்பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பொறியாளர் சாதிக்பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.
 


Page 30 of 167