Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஸ்ரீவிலி.யில் தெரு விளக்குகள் துவக்க விழா

Print PDF
தினமணி         01.04.2013

ஸ்ரீவிலி.யில் தெரு விளக்குகள் துவக்க விழா


ஸ்ரீவில்லிபுத்தூர், அசோக் நகரில் புதிதாக 15 தெரு விளக்குகளை இயக்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி. செந்தில்குமாரி உரையாற்றினார்.

விழா நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி. முத்துராஜ் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் சரோஜா வரவேற்றார். தெரு விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:

மக்களுக்கு தொலை நோக்கான திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

1.85 லட்சம் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு இலவச அரிசி வழங்கி உணவு பாதுகாப்பு, 29 லட்சம் பேருக்கு ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கி சமூக பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை தந்து வெண்மை புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

நிகழ்ச்சியில் அசோக்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் நிஜாம், நகர்மன்ற உறுப்பினர் இசக்கியம்மாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
 

திண்டிவனம் நகரில் ரூ.1 கோடியில் சாலைகள்

Print PDF
தினமணி         29.03.2013

திண்டிவனம் நகரில் ரூ.1 கோடியில் சாலைகள்


திண்டிவனம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் ஆர்.எஸ்.ராமலிங்கம் மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற நகர்மன்ற அவரசக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகரில் உள்ள 32-வது வார்டில் 4 லட்சத்து 75 ஆயிரத்தில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், 33-வது வார்டில் 5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைத்தல், 5-வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, 4-வது வார்டில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என, ரூ.1 கோடிக்கு மேல் நகரின் பல்வேறு வார்டுகளில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும், ரூ.50 லட்சம் செலவில் நகரின் பல்வேறு வார்டுகளில் வடிகால் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 124 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

கருணாவூர்பாட்டை செல்லும் வழியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஜனார்த்தனன் வைத்த கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

திமுக நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.எஸ். ரவி, திண்டிவனம் நகருக்கு எங்கு, எப்போது புதிய பஸ் நிலையம் அமையுமென கேள்வி எழுப்பினார். நடப்பு நிதியாண்டில் நிதி கிடைத்தபிறகு அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
 

குமரி மாவட்டத்தில் ரூ.11.63 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

Print PDF
தினமணி         26.03.2013

குமரி மாவட்டத்தில் ரூ.11.63 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக ரூ.11.63 கோடியில், 90.2 கி.மீ. தொலைவுக்கு, 46 சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் நபார்டு சாலைகள் திட்டத்தின் கீழ் 31 கி.மீ. தொலைவுக்கு 9 சாலைப் பணிகள் ரூ.4.74 கோடி மதிப்பீட்டில் தோவாளை, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் 8 பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காரியங்கோணம் முதல் கொள்ளந்திருத்தி வரை 9 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைந்த தொகுப்பு நிதி திட்டத்தில்  பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பேச்சிப்பாறை பகுதிக்கு உள்பட்ட பழங்குடி மக்களுக்காக 12 கி.மீ. தொலைவுக்கு 4 சாலைப் பணிகள், 13 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் ரூ.3.13 கோடியில் நடைபெற்று வருகின்றன.

மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழையால் சாலை பாதிக்காதவாறு நடைபெற்று வரும் இப் பணிகளில் ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

13-வது மான்யக் குழுத் திட்டத்தின் கீழ் 42 கி.மீ. தொலைவுள்ள 30 சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.3.5 கோடியில் மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 29 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும்  திட்டத்தின் கீழ் 5.6 கி.மீ. தொலைவில் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, மேல்புறம் ஊராட்சி ஒன்றியங்களில் தலா 1 பணி வீதம் 3 சாலைப் பணிகள் ரூ. 40.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவும், ஜல்லி, தார் கலவை மாதிரிகள் சுங்கான்கடையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு  பரிசோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே பட்டியல் தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் ஆட்சியர்.
 


Page 31 of 167