Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

புழுதிவாக்கத்தில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.28 லட்சத்தில் தார் சாலை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               23.03.2013

புழுதிவாக்கத்தில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.28 லட்சத்தில் தார் சாலை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பெருங்குடி 14–வது மண்டலத்தில் உள்ள புழுதிவாக்கம் 168–வது வட்டம் கண்ணகி தெருவில் பள்ளி கூடங்கள் உள்ளன. இங்கு சுமார் 2000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக இந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, மூடப்பட்டன.

இதனால் இந்த சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக இருந்ததால் மாணவர்கள் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை கண்டித்து பள்ளி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் குண்டும், குழியுமான அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என மாநகராட்சி மேயருக்கு மாணவ–மாணவிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

பள்ளி மாணவ–மாணவிகளின் கோரிக்கை ஏற்று இந்த சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்ற மாநகராட்சி சார்பில், ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல அலுவலர் இளஞ்செழியன், பள்ளிக்கூட தாளாளர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சாலையை விரைவாக அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

ஸ்ரீவிலி.-மம்சாபுரம் சாலை இருவழிப் பாதையாக மாற்றப்படும்

Print PDF
தினமணி         11.03.2013

ஸ்ரீவிலி.-மம்சாபுரம் சாலை இருவழிப் பாதையாக மாற்றப்படும்


ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இருவழிச் சாலையாக மாற்றி, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ. 22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பி. அய்யனார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜூ வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் வாழ்த்துரையில் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். அப்போது தான் இப்பகுதி முழுமையான வளர்ச்சி அடையும். அரசு ஏழை மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.    அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கால்நடை மருந்தகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய போது கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர்-மமசாபுரம் சாலையை இருவழிச் சாலைûயாக மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். விரைவில் இச்சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்படும் என்றார்.

மேலும் வருவாய்த் துறை சார்பில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சொ. தெய்வநாயகம், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பா. ஜெயச்சந்திரசேகர், மாவட்ட அரசுப் பணியாளர் (பேரூராட்சிகள் துறை) சங்கத் தலைவர் ஆ. காமராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மல்லி எஸ்.ஆர். துரைப்பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி. முத்துராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விருதுநகர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சி. சிவானந்தம் நன்றி கூறினார்.
 

அயனாவரத்தில் ரூ2.42 கோடியில் சாலை விரிவாக்கம்

Print PDF

தினகரன்         09.03.2013

அயனாவரத்தில் ரூ2.42 கோடியில் சாலை விரிவாக்கம்


சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் அயனாவரம் சாலை மற்றும் ராஜு தெரு ரூ2 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் செலவில் அகலப்படுத்தி செப்பனிடப்படுகிறது. இப்பணி தொடக்க விழா நேற்று காலை நடந்தது. மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஜே.சி.டி.பிரபாகரன், நீலகண்டன், கவுன்சிலர் ராசு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சுமார் 1420 மீட்டர் அளவுக்கு சாலை அகலப்படுத்தி செப்பனிடப்படுகிறது. இப்பணியை 3 மாதத்தில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது‘ என்றார்.

 


Page 32 of 167