Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆலம்பாறையில் ரூ. 2.55 கோடியில் பிளாஸ்டிக் தார்ச்சாலைப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி       18.02.2013

ஆலம்பாறையில் ரூ. 2.55 கோடியில் பிளாஸ்டிக் தார்ச்சாலைப் பணி தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ரூ. 2.55 கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து இப் பணியை மேற்கொள்கின்றன.

இதில் ரூ. 1.47 கோடியில் ஆலம்பாறை-மணலோடை-புறாவிளை வழியான 10 கி.மீ. தொலைவு கொண்ட காளிகேசம் சாலையும், ரூ. 1.08 கோடியில் ஆலம்பாறை-பெருஞ்சாணி இடையேயான 7.20 கி.மீ. தொலைவு கொண்ட சாலையும் சீரமைக்கப்படுகின்றன.

இதையொட்டி ஆலம்பாறையில் ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமையில் விழா நடைபெற்றது.

சாலைப் பணிகளைத் தொடக்கிவைத்து வனத் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் பேசியதாவது:

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீர் வசதி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இப்போது முதல்வரின் உத்தரவின் பேரில் வனப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி ஆலம்பாறை-காளிகேசம் சாலை, ஆலம்பாறை பெருஞ்சாணி சாலை ஆகியவை ரூ. 2.55 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்ச்சாலையாக செப்பனிடப்படுகின்றன என்றார் அவர்.

மாவட்ட வன அலுவலர் ரிட்டோ சிரியாக், வனப் பொறியாளர் லோகநாதன், வனச் சரகர் தங்கசாமி, வனவர் பிரவிண், காரவிளை செல்வன், திருவட்டாறு ஒன்றியச் செயலர் ஜெயசுதர்சன், துணைச் செயலர் ராஜன்,

மனோகரன், ஆர். முருகன், சக்கீர் உசேன், ஜீன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 18 February 2013 08:02
 

ஓசூர் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி

Print PDF

தினமணி                      05.09.2012

ஓசூர் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி

பெங்களூர், செப். 4:அதிகாரிகளின் கவனக்குறைவால் தடைப்பட்டிருந்த ஓசூர்சாலை இடையிலான சாலை வளர்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும் என்று மேயர் வெங்கடேஷ்மூர்த்தி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை ஓசூர்சாலையை துணை மேயர் எல்.ஸ்ரீனிவாஸ், ஆளும்கட்சித்தலைவர் என்.நாகராஜ் மற்றும் ஆணையர் ரஜனீஷ்கோயல் ஆகியோருடன் ஆய்வுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக டெய்ரி சதுக்கத்திலிருந்து மடிவாளா இடையிலான ஓசூர் சாலை அகலப்படுத்தும் பணி அதிகரிகாரிகளின் கவனக்குறைவால் தடைபட்டிருந்தது உண்மை.  சாலையை அகலப்படுத்தும் பணி வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெறும். சாலையின் இருமருங்கிலும் உள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பாகஅதன் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளின் கவனக்குறைவால் அதன் பின்னர் எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்தசாலையில் எந்தவளர்ச்சிப்பணியையும் செய்ய முடியாமல் போனது. ஓசூர் சாலையை அகலப்படுத்தும் பணி தாமதத்திற்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். மேலும் லஷ்கர்-ஓசூர் சாலை இடையே உள்ள பாதையில் மாநகராட்சிக்கு சொந்தமான 47 சொத்துக்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள கட்டடங்களை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் உள்ளனர். இதற்கு அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். ஏற்கனவே போடப்பட்ட லஷ்கர்- ஓசூர்சாலை இடையிலான பாதை உறுதியானதாக இல்லை என்றார் அவர்.
 

முகலிவாக்கத்தில் 11 கி.மீ., நீளத்தில் சாலை மூன்று மாதத்தில் முடிக்க திட்டம்

Print PDF

தினமலர்        04.09.2012

முகலிவாக்கத்தில் 11 கி.மீ., நீளத்தில் சாலை மூன்று மாதத்தில் முடிக்க திட்டம்

முகலிவாக்கம்:ஊராட்சியாக இருந்து மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட முகலிவாக்கம் பகுதியில், 11 கி.மீ., சாலை அமைக்க, மாநகராட்சி 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த பணியை மூன்று மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.மாநகராட்சி 156வது வார்டாக முகலிவாக்கம் உள்ளது. முன்பு ஊராட்சி அமைப்பாக இருந்தது. இது ஆலந்தூர் மண்டல வார்டு பரப்பளவில் பெரியது. தெருக்கள் அதிகம். விவசாய நிலங்களும் உள்ளன. நெல், வாழை, கீரை போன்றவை பயிரிடப்படுகிறது. கிராமிய மணம் முகலிவாக்கம் பகுதியில் சூழ்ந்திருக்கும்.ஊராட்சியாக இருந்தபோது, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தன.

மாநகராட்சியுடன் இணைந்தபிறகு, கூடுதல் கவனம் செலுத்தி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் போன்ற கட்டமைப்புடன், நவீன சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பகுதியில் 31 சாலைகள் அமைக்க, 10 கோடி ரூபாய் மாநகராட்சி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது. 11 கி.மீ., நீளமும், 80 ஆயிரத்து, 810 சதுர மீட்டர் பரப்பளவிலும் இந்த சாலை அமைய உள்ளது.
 
தற்போது இருக்கும் கரடு முரடு சாலைகளை, தோண்டி நான்கு அடுக்கு கட்டமைப்பில் சாலை அமைகிறது.20 செ.மீ., கனத்தில் பெரிய ஜல்லி போடப்பட்டு சம படுத்தப்படும். அதற்கு மேல், 20 செ. மீ., கன அளவில், பாறைப்பொடியுடன் கலந்த ஜல்லி போட்டுசமப்படுத்தி, அதற்குமேல், 5 செ.மீ., கனத்தில் பெரிய ஜல்லி மிக்சர் போட்டு சமபடுத்தப்படும். அதற்குமேல், 4 செ.மீ., கன அளவில் சிறிய ஜல்லி கலந்த மிக்சர் கலவை போட்டு சமபடுத்தப்படும். மொத்தத்தில், சாலை அரை மீட்டர் கனஅளவில் சாலை அமைய உள்ளன. இந்த பணியை மூன்று மாதக்காலத்தில் முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, ""ஊராட்சியாக இருந்த முகலிவாக்கம் பகுதிக்கு, கூடுதல் கவனம் செலுத்தி, சாலை அமைக்க, மாநகராட்சி 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தரமான சாலையாக அமையும் இந்த பணியை, மூன்று மாதக்காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்று கூறினார்.
 


Page 34 of 167