தினமணி 14.05.2010
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை
திருவண்ணாமலை, மே 13: பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2010-11ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு மே 18-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அரசு மகளில் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு வரும் 19-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. மேற்கண்ட கலந்தாய்வுகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்தாய்வு அலுவலராக செயல்படுவார்.
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு வரும் 18-ம் தேதி திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அதேபோல் மேற்கண்ட ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 19-ம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறும். முதன்மைக் கல்வி அலுவலர் கலந்தாய்வை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.