தினமலர் 18.05.2010
கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்
கோபிசெட்டிபாளையம்: கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 40, நகராட்சி பள்ளிகள் 2, அரசு நிதி உதவி பள்ளிகள் 4, சுயநிதி பள்ளிகள் 13, மெட்ரிக் பள்ளிகள் 17 என மொத்தம் 76 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 956 மாணவ மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். அரசு பள்ளிகளை சேர்ந்த 5,040 பேரும், நகராட்சி பள்ளிகளை சேர்ந்த 268 பேரும் என மொத்தமாக 5,308 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். அரசு பள்ளிகளை சேர்ந்த 4,433 பேர், நகராட்சி பள்ளிகளை சேர்ந்த 222 பேர் என மொத்தமாக 4,655 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2008-09ல் கோபி கல்வி மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.84. 2009-10ல் 87.96 சதவீதம். நகராட்சி பள்ளிகளில் 80.09 லிருந்து 82.84 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 94.64 லிருந்து 94.14 ஆக குறைந்தும், மெட்ரிக் பள்ளிகளில் 98.03 லிருந்து 97.45 ஆக குறைந்தும், சுயநிதி பள்ளிகளில் 97.91 லிருந்து 98.86 ஆக உயர்ந்தும் உள்ளது.
கோபி கல்வி மாவட்டத்தில் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி பண்ணாரியம்மன் மெட்ரிக் பள்ளி, கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பு. புளியம்பட்டி எஸ்.ஆர்.சி., மெட்ரிக் பள்ளி, கோபி ஸ்ரீ வித்யாலாய மெட்ரிக் பள்ளி, சத்தி புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, பவானி புனித மரியன்னை மெட்ரிக் பள்ளி, கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் காமராஜர் மேல்நிலை பள்ளி, கோபி டி.எஸ். சாரதா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.