Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை

Print PDF

தினமணி      18.05.2010

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை

மதுரை, மே 17: தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

ஈரோட்டில் தேசிய குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 27 மாநில அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் தமிழக அணி சார்பில் சோல்ஜர்ஸ் பாக்ஸிங் அகாதெமி வீராங்கனை டி.சிவதமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.

இவர் மதுரை மாநகராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார்.

61-63 கிலோ எடை பிரிவினருக்கான போட்டியில் இவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஏற்கெனவே பாட்னாவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

சிவதமிழ்ச்செல்வியை சோல்ஜர்ஸ் பாக்ஸிங் அகாதெமி நிறுவனரும் மதுரை மாவட்ட குத்துச் சண்டைக் கழகச் செயலருமான பாஸ்கரசெழியன் பாராட்டினார்.

சப்-ஜூனியர் குத்துச் சண்டைப் போட்டி: மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி சென்னை ஜே.என்.ஸ்டேடியத்தில் மே 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏ.கே.கருணாகரன், செல் எண் 94443 86090, என்.பி.விஸ்வநாதன் 91760 66225 மற்றும் பாஸ்கரசெழியன் 98654 71144 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.