Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

Print PDF

தினமணி    20.05.2010

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

மதுரை, மே 19: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவிகளை மேயர் ஜி.தேன்மொழி ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினார்.

பிளஸ் 2 தேர்வில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பரமேஸ்வரி, புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் ஈ.வெ.ரா. பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். எஸ்.ஜஸ்மீதா பானு 1133 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், எம்.நபீலா பானு 1110 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதலிடம் மற்றும் மாநகராட்சி அளவில் முதல் இடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி தலா ரூ.3000, இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.2000-ஐ மேயர் வழங்கினார்.

ஆணையாளர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன், தலைமைப் பொறியாளர் சக்திவேல், மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.