Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிகளை மூடுகிறது மாநகராட்சி

Print PDF

தினகரன்            25.05.2010

மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிகளை மூடுகிறது மாநகராட்சி

மும்பை, மே 25: மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரு வதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிக் கூடங்களை மும்பை மாநக ராட்சி இழுத்து மூடி வரு கிறது.

மும்பையில் மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய பிராந்திய மொழி பள்ளிகளையும், ஆங்கில வழி பள்ளிக்கூடங் களையும் மாநகராட்சி நடத்தி வருகிறது.

ஆனால் ஆண்டுக்கு ஆண்டுக்கு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் பயி லும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருவ தால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மாநகராட்சி 64 பள்ளி களை மூடியுள்ளது.

இது தொடர்பாக அனில் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் மாநகராட்சி 1,08,311 மாணவர்களை இழந்துள் ளது. 2004&05 ஆண்டில் 450 மராத்தி பள்ளிக்கூடங் கள் இருந்தன. இவற்றில் 1,77,538 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால் 2009&01ம் ஆன்டு இந்த பள்ளிகளின் எண்ணிக்கை 413 ஆக குறைந்தது.

இவற்றில் தற்போது 1,07,413 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதே போல் இந்தி மீடியம் பள்ளிகளில் கடந்த 2004&05ல் 1,35,797 மாண வர்கள் படித்தனர். இது 2009&10ல் 1,13,726 ஆக குறைந்தது. இந்தி மீடியம் பள்ளிகள் 2 மூடப்பட்டுள் ளன. குஜராத்தி மீடியம் பள்ளிகள் 6,967 மாணவர் களை இழந்துள்ளன.

உருது பள்ளிகளின் எண்ணிக்கை 208ல் இருந்து 203 ஆக குறைந் துள்ளது. கடந்த 2004&05ல் மாநகராட்சி 50 தமிழ் மீடி யம் பள்ளிகளை நடத்தி வந்தது. இவற்றில் மொத் தம் 15,813 மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் பள்ளிகள் 45 மட்டு மே உள்ளன. இதில் 10,032 மாணவர்கள் படிக்கின்ற னர். இதே கால கட்டத்தில் 5 தெலுங்கு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பிராந் திய மொழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் அதே நேரத்தில் ஆங்கில வழிக்கல்வியை தேர்ந்து எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2004&05ல் மும்பை மாநகராட்சி 46 ஆங்கில வழி பள்ளிக்கூடங் களை நடத்தியது. இதில் மொத்தம் 18,418 மாணவர் கள் பயின்றனர். ஆனால் தற்போது பள்ளிகளின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. படிக்கும் மாணவர்களோ 26,637 பேர். இவ்வாறு அந்த தக வலில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கல்வி கமிட்டி தலைவர் ருக்மிணி கார்தமால் இது பற்றி கூறுகையில்,"ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வளமாக இருக் கும் என்று பெற்றோர் நம்புகின்றனர். இதனால் ஆங்கில மீடியம் பள்ளி களில் சேரும் மாணவர் களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது" என் றார்.