Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி...அதிகரிப்பு: 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் ஏராளம்

Print PDF

தினகரன்         27.05.2010

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி...அதிகரிப்பு: 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் ஏராளம்

சென்னைசென்னை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 85.33 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 65 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 9,115 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் 85.35 சதவீத அளவிற்கு, 7,778 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அளவிற்கு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய 3,959 மாணவர்களில் 3,186 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,186 மாணவியரில் 4,592 தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 80.47 சதவீதமும், மாணவியர் 89.06 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,138 மாணவ, மாணவியர் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 18 மாணவ, மாணவியர் பல பாடங்களில் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

ஏழுகிணறு, சிந்தாதிரிபேட்டை, வன்னிய தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சங்கீதா, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்பு நிஷா, புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கீர்த்திகா ஆகிய மூன்று பேரும், 487 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகளில் முதல் நிலை பெற்றுள்ளனர்.

திருவான்மியூர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆறுமுகம் 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வசந்தகுமாரி, மடுவங்கரை மாநகராட்சி பள்ளி மாணவி விஷ்ணு பிரியா 483 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். மாநகராட்சியின் 65 பள்ளிகளில், 46 பள்ளிகள் 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

ராயபுரம் மணிகண்ட முதலி தெரு மாநகராட்சி பள்ளி மிகக் குறைந்த அளவாக 39 சதவீத அளவிற்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளியில் 58 பேர் தேர்வு எழுதி 23 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்றவர்கள், துணை கமிஷனர் (கல்வி) பாலாஜியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணாக 487 பெற்ற சங்கீதா, நுங்கம் பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தந்தை கந்தவேல், ஆவின் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார்."தினமும் இரவு 10 மணி வரை படித்து விட்டு, அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை தினமும் படிப்பேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்' என, சங்கீதா கூறினார்.

புல்லா அவென்யூ மாநகராட்சி பள்ளியில் படித்த கீர்த்திகாவும் 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இவரது தந்தை கருணாகரன், தனியார் நிறுவன கார் டிரைவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவதாக கீர்த்திகா கூறினார்.திருவான்மியூர் சென்னை மாநகராட்சி பள்ளயில் படித்த ஆறுமுகம் 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை சுப்பிரமணி, திருவான்மியூரில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துபவர்.ஆறுமுகம் கூறும்போது, "பி.., படிக்க விரும்புகிறேன். திருவான்மியூர் பள்ளியில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தூண்டுதலால் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றேன்' என்றார்.