Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 11.06.2010

நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி

ஓசூர்: ஓசூர் நகராட்சி உருது, கன்னடம், தமிழ், தெலுங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் சத்யா பேரணியை துவக்கி வைத்தார். துணை தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் அக்ரோ நாகராஜ், எல்லோராமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருது பள்ளி தலைமை ஆசிரியர் ரவி அப்துல்லா வரவேற்றார். பேரணி பள்ளி முன் இருந்து துவக்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு கல்வி விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பேரணியில் 1, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர்கள் சுகுமார், ஆர்.எஸ்.மணி, சுந்தர்ராஜன், தொடக்க கல்வி அலுவலர் பாரதி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகேஷ், ஒன்றிய அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*வேப்பனப்பள்ளி ஒன்றியம் வேப்பனப்பள்ளி தமிழ் மற்றும் தெலுங்கு தொடக்கப்பள்ளி, குறுவள மையம் ஆகியவை சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை யூனியன் சேர்மேன் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணி, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி, ரகு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியயோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர