தினகரன் 18.06.2010
பண்ருட்டி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பண்ருட்டி, ஜூன் 18: பண்ருட்டி அருகே விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக அரசு கணக்கில் ரூ. 1 லட்சத்தை நன்கொடையாளர்கள் சில வாரங்களுக்கு முன் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி துவங்குவதற்கான அனைத்து பணிகளும் நடந்து முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் பண்ருட்டிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் பள்ளி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, அரசு சார்பில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் போதுமான இடம், பாதுகாப்பு வசதிகள் உள்ளது. வேல்முருகன் எம்எல்ஏ உதவியுடன் நடப்பாண்டே இந்த பள்ளி துவங்கப்படுவது உறுதி, என்றார்.
பண்ருட்டி நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் பன்னீர்செல்வம், சமூக நலத்திட்ட தாசில்தார் மங்களம், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் அம்பிகா உட்பட பலர் உடன் இருந்தனர்