Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றமாநகராட்சி பணியாளர் குழந்தைகளுக்கு பாராட்டு

Print PDF

தினமலர் 30.06.2010

அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றமாநகராட்சி பணியாளர் குழந்தைகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி:அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நெல்லை மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கம் சார்பில் சர்வதேச பொதுப்பணி தினம் மற்றும் 10ம் வ குப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நெல்லை ஜங்ஷனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன், மாநில அமைப்பு செயலாளர் முத்துத்துரை, மாநில துணை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து 12ம் ம் வகுப்பு அரசு தேர்வில் ஆயிரத்து 100 மார்க்கிற்கு மேல் பெற்ற செந்தில் விநாயகம், லீலா பிரியதர்ஷினி, முத்துலட்சுமி, ஆனந்தி, அருணச்சலம், பிரேமலதா மற்றும் பூமி மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் 400 மார்க்கிற்கு மேல் பெற்ற முத்தரசி, மகாராணி, இசக்கியம்மாள், நிர்மலா, சுரேஷ் அரவிந்த், பாத்திமா பர்தா, அருணாச்சலம், சண்முக பிரியா, சுந்தரராஜன், சரத்குமார், பவித்ரா, வீரபாகு, ஷெரீன் பர்கானா, ராஜேஷ் கண்ணா, சபரிநாதன், வேலம்மாள், சதீஸ் கணபதி ஆகியோருக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.விழாவில், மேலப்பாளையம் மண்டல தலைவர் முகமது மைதீன், செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ராமச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் முத்துதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.