Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

Print PDF

தினமணி 20.07.2010

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி, ஜூலை 19: திருநெல்வேலி மாநகராட்சி பள்ளியில் பயின்று அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் தியாகி எம்.எஸ். மகாராஜபிள்ளையின் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி புறநகர் சுழற்சங்கமும், மகாராஜபிள்ளை சிலை அமைப்புக் குழுவும் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு, குழுவின் தலைவர் ச. மேகலிங்கம் தலைமை தாங்கினார்.

சுழற்சங்கத் தலைவர் ஜெ. நயினா முகமது முன்னிலை வகித்தார். விழாவில், மகாராஜ பிள்ளைக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்று அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. ஊக்கப் பரிசையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட சமூக நல அலுவலர் வி. உமாதேவி வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிலை அமைப்புக் குழுவின் கெüரவத் தலைவர் சிவ. சோமநாதன், கெüரவச் செயலர் பி.டி. சிதம்பரம், சுழற்சங்கச் செயலர் ஏ. ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பாளையங்கோட்டை சைவப் பெருமக்கள் உறவின்முறை சங்கத் தலைவர் எஸ்.. கண்ணன் வரவேற்றார். செயலர் சபரி எஸ். பாலு நன்றி கூறினார்.