தினகரன் 27.07.2010
சிறப்புப்பள்ளி புதிய கட்டடம் திறப்பு
திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி மேலபனங்காட்டாங்குடியில் மனோலயம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி புதிய கட்டட திறப்பு விழா கலெக்டர் சந்திரசேகரன் தலைமையி நடைபெற்றது. தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் நிதி உதவியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்து, 66 சென்ட் நிலம் தந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தந்த கல்வி புரவலர் பதுருதீனை பாரா ட்டினார். தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வாரியத்தை தொடங்கி அதனை தன்வச ம் வைத்து பல திட்டங்களை தீட்டி வருகிறார் என்றார். ஜபருல்லாகான் வரவேற் றார். நகர் மன்ற உறுப்பினர் ஜெயராஜ், தொலை தொட ர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் ரகு நாதன், மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். மனோலயம் பள்ளி நிர்வாகி முருகையன் நன்றி கூறினார்.