தினகரன் 28.07.2010
படைப்பாற்றல் கல்வி பயிற்சி
கரூர், ஜூலை 28: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார் பில் கரூர் நகராட்சி மேல்நி லைப் பள்ளியில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி பயிற்சி, கரூர் வட்டார வளமைய பயிற்சி நடைபெற் றது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 84 பேர் முதல் கட் டமாக பயிற்சி பெற்றனர். எளிமைபடுத்தப்பட்ட படை ப்பாற்றல் கல்வி பயிற்சியில் அறிமுகம், படித்தல், கருத்து வரைப்படம், தொகுத்தல், வலுவூட்டுதல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய திறன்கள் பற் றிய பயிற்சி 2 நாட்கள் நடைபெற்றது.
பயிற்சியை ஒருங்கிணைப்பாளர்கள் சிவஞானம், பரமானந்தம், மேற்பார்வையாளர் ருங்மாங்கதன், மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபு, அன்பு, வெங்க டேஷ், சுந்தரராஜன் ஆகி யோர் பார்வையிட்டனர்.