தினகரன் 06.08.2010
மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைப்பு
சென்னை, ஆக.6: பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் கணித சூத்திரங்கள் (திஷீக்ஷீனீuறீணீ) மற்றும் இதர சமன்பாடுகள் (ணிஹீuணீtவீஷீஸீs) போன்றவற்றை ஆசிரியர்கள் நேரடியாக மாணவ&மாணவிகளுக்கு சொல்லி தருவதைவிட கணினி மூலம் ஒலி&ஒளி வடிவில் பார்த்து, கேட்டு, படித்தால் மனதில் எளிதில் பதிந்துவிடும். கணித ஆய்வகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கற்றல் திறன், ஆர்வம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை போன்ற சிறப்புகளை பெறமுடியும்.
இதைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சென்னைப் பள்ளிக ளில் ‘கணித ஆய்வகம்’ 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் உருவாக்கி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வடசென்னையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, தென் சென்னையில் சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.
இந்த 2 பள்ளிகளிலும் 40 அடி நீளத்திலும் 20 அடி அகலத்திலும் கணித ஆய்வகத்திற்கான வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் ரூ4 லட்சம் செல வில் அமைக்கப்படவுள்ளது. 6முதல் 8ம் வகுப்பு வரையிலான 1,500 மாணவ&மாணவிகளுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
தனியார் நிறுவனம் வழங்கும் இந்த பயிற்சிக்காக ரூ4.17 லட்சம் செலவிடப்படவுள்ளது. இதற்கு மாநகராட்சி மன்ற கூட்டம் அனுமதி வழங்கி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாதிரி கணித ஆய்வகம்:
அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘மாதிரி கணித ஆய்வகம்’ உள்ளது. தமிழகம் முழுவதும் 100 அரசு பள்ளிகளில் கணித ஆய்வகத்திற்கான பயிற்சி பொருட்கள் கொள்முதல் செய்யவும் தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.