Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு

Print PDF

தினகரன் 10.08.2010

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு

மும்பை,ஆக.10: மும்பை மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் படிப்பு திறமையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர்களால் எழுத படிக்க கூட முடிவ தில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற் காக மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப் பட்டு அவர்களின் திறமை கண் டறியப்படும்.

இதில் மராத்தி, இந்தி மற்றும் ஆங்கில மீடிய பள்ளிகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு எந்த அளவுக்கு கற்கும் தன்மை இருக்கிறது என்பதை கணக் கிட்டு அதனை மேம்படுத்த இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக மாநகராட்சி கல்வி அதிகாரி ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் நியமித்திருக்கிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.