தினகரன் 10.08.2010
கைப்பந்து போட்டி மாநகராட்சி பெண்கள் பள்ளி வெற்றி
கோவை, ஆக. 10:கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ் கைப்பந்து மற்றும் பிஷப் அம்புரோஸ் நினைவு கால்பந்து போட்டிகள் ஒத்தக்கால் மண்டபம் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆன்டனி பெர்னாண்டஸ் வரவேற்றார். கல்லூரி தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். சுங்கத்துறை ஆணையர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார். கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பிஷப்தாமஸ் அக்வினாஸ் சுழற்கோப்பை, மற்றும் காசோலை வழங்கப்பட்டது. ஆண் கள் கைப்பந்து போட்டியில் பொள் ளாச்சி என்.ஜி.என்.ஜி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்பரிசு பெற் றது. பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதல் பரிசு பெற்றது.
பள்ளி, பாலிடெக்னிக் அள விலான கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பிஷப் அம்புரோஸ் நினைவு சுழற்கோப்பை மற்றும் காசோலை வழங்கப்பட்டது.
பள்ளி அளவிலான போட்டியில் கோவை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்றது. பாலிடெக்னிக் அளவிலான போட்டியில் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.