Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பத்மநாபபுரத்தில் ஊர்ப்புற நூலக கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 10.08.2010

பத்மநாபபுரத்தில் ஊர்ப்புற நூலக கட்டடம் திறப்பு

தக்கலை, ஆக. 9: பத்மநாபபுரம் நகராட்சியில் | 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊர்ப்புற நூலக கட்டடத்தை தியோடர் ரெஜினால்டு எம்.எல்.. திறந்து வைத்தார்.

பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் தலைமை வகித்தார். ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சனல்குமார், பொதுப்பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் பிச்சையம்மாள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் அனந்தபாய் தங்கச்சி, வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாசகர் வட்ட துணைத் தலைவர் சிபிமைக்கின் வரவேற்றார். ஊர்ப்புற நூலகர் சித்ரா நன்றி கூறினார்.