Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறப்பு

Print PDF

தினகரன் 26.08.2010

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறப்பு

சென்னை, ஆக.26: கணித சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை செயல்வழி மூலம் கற்றுக்கொள்வதற்காக மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில், கணித பாடத்தின் சூத்திரங்கள் மற்றும் இதர சமன்பாடுகள் போன்றவற்றை மாணவர்களுக்கு நேரடியாக ஆசிரியர்கள் கற்பிப்பதை விட கணினி மூலம், ஒலி, ஒளி வடிவில் பார்த்து, கேட்டு செய்முறை மூலம் மாணவர்கள் பயிற்சி எடுத்தால் எளிதில் பதிந்துவிடும். இதனால் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். ஆகவே வடசென்னை, தென்சென்னையில் தலா ஒரு கணித ஆய்வகம்அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணித ஆய்வகத்தைமேயர் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் 97 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் 40 ஆயிரம் மாணவ&மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காக கணித ஆய்வகம்சைதாப்பேட்டையிலும், வடசென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கணித ஆய்வகத்தில் உள்ள உபகரணங்கள் உதவியுடன் செயல் வழி மூலம் கணித சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை மாணவ&மாணவிகள் எளிதில் கற்கமுடியும். இப்படி கற்கும் போது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இது போன்ற கணித ஆய்வகத்தின் மூலம் பயிற்சி பெறும் போது கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் 6முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ&மாணவிகள் 1,500 பேர் பயன்பெறுவர். இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தபிறகு மற்ற பள்ளிகளுக்கும் இது போன்ற ஆய்வகம் அமைக்கப்படும்.

இந்த ஆய்வகத்தில் உபகரணங்களுடன் இராமானுஜம் அருங்காட்சியகம் மற்றும் கணித கல்வி மையத்தினர் மூன்றாண்டு பயிற்சி அளிப்பர். இதற்காக ரூ4.17 லட்சம் செலவிடப்படுகிறது. ஆய்வகத்தில் மாணவர்கள் அமர்வதற்காக சுழல் நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாடங்கள் ரூ3 லட்சத்து 89,400க்கு வாங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அழகான சூழலில் அமர்ந்து பயிற்சி பெறும் வகையில் ஆய்வக அறையில் தரையில் டைல்ஸ் ஒட்டியும், மின்விசிறிகள் வைத்தும், சுவர்களில் வண்ணம் தீட்டியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. கணித மேதைகளின் உருவப்படங்கள் மற்றும் அவர்களது வரலாறு அடங்கிய லேமினேஷன் போட்டோக் களும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மேயர் பேசினார்.

மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் (கல்வி) பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.