தினகரன் 04.09.2010
சென்னையை போல் மாநகராட்சி
, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றப்படுமா?சிவகங்கை
, செப். 4: சென்னை மாநகராட்சியை போல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளை போல்
, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகள்
, சென்னை மேல்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள், சென்னை உயர்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், சென்னை நடுநிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளிகள், சென்னை தொடக்க பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகள், சென்னை மழலையர் பள்ளிகளாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநகராட்சிகள்
, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களையும் மாற்றம¢செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக கல்வித்துறை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறும்போது
,‘ மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது பொதுமக்களுக்கு தரக்குறைவாக தோன்றுவதால், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மக்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் சென்னையில் உள்ள பள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களை மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என்றார்.