தினகரன் 06.09.2010
நகராட்சி பள்ளியில் குழந்தைகள் அறிவியல் விழா
கடலூர், செப். 6: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் கிளை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு துளிர் இல்ல குழந்தைகளுக்கான அறிவியல் திருவிழா நிகழ்ச்சி கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரராசு தலைமை தாங்கினார். துளிர் இல்லப்பொறுப்பாளர்கள் ரஜினி, ஆனந்த், உதயேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினராக அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கலந்துகொண்டு அறிவியல் உரை நிகழ்த்தினார்.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதய குமார்சாம், முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திரமா? தந்திரமா? காகிதக்கலை, கணக்கும் இனிக்கும், எளிய அறிவியல் சோதனைகள், அறிவியல் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்பட்டன.
கடலூர் நகரில் செயல்படும் பல்வேறு துளிர் இல்லத்தை சேர்ந்த 100 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உட்பட அறிவியில் இயக்கத்தை சேர்ந்த வைத்திலிங்கம், சின்னத்துரை, சந்தானம், அய்யாதுரை மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.