தினமலர் 08.09.210
மாநகராட்சி பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கட்டடம்
மதுரை : மதுரை கிருஷ்ணாபுரம்காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடடம் கட்டப்படுகிறது. இப்பணிகளை நேற்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆய்வு செய்தனர்.
சிங்கராயர் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்துவது குறித்தும், அப்பகுதியில் பூங்கா, மின்வசதி, நடைபாதை, சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும் மேயர் ஆலோசினை நடத்தினார்.
பின் மாநகராட்சி அலுவலகத்தில் வடக்கு மண்டல மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. சொக்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், ஞாயிற்றுக் கிழமை சந்தையில் உண்மையான வாரிசுதாரருக்கு கடை ஒதுக்கீடு செய்யக் கோரியும் மனுக்கள் கொடுக்கப் பட்டன. இவற்றின் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில் தலைமைபொறியாளர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜய குமார், நகர்நல அலுவலர் சுப்பிர மணியன், நகரமைப்பு அலுவலர் வைத்தியலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.