Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி: மேயர் நேரில் ஆய்வு

Print PDF

தினமணி 08.09.2010

மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி: மேயர் நேரில் ஆய்வு

மதுரை,செப்.7: மதுரை கிருஷ்ணாபுரம் காலனி மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகளை மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 13 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனை நேரில் பார்வையிட்ட மேயர், கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோரும் அவருடன் ஆய்வில் கலந்துகொண்டனர்.

பூங்காவில் ஆய்வு: சிங்கராயர் காலனிக்குச் சென்று அங்குள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, மற்றும் மாநகராட்சி பூங்கா ஆகியவற்றை மேயர் தேன்மொழி பார்வையிட்டார்.

ஆரம்பப் பள்ளியை தரம் உயர்த்துவது குறித்தும் பூங்காவில் மின்சார வசதி, நடைபாதை, சுற்றுச்சுவர் அமைப்பது பற்றியும் மேயர் ஆலோசனை நடத்தினார். இதûனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மதுரை வடக்கு மணடலத்திற்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. சொக்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், ஞாயிற்றுக்கிழமை சந்தையிலுள்ள கடையை உண்மையான வாரிசுதாரருக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேயர் உத்தரவிட்டார். மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் அமுதா, உமா, நீலமேகம், தலைமைப்பொறியாளர் சக்திவேல்,கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.விஜயகுமார், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (வடக்கு) ராஜகாந்தி,கல்வி அலுவலர் வைத்திலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.