தினமலர் 29.09.2010
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி
சென்னை: மாநகராட்சி, கூடுதலாக மேலும் 40 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவங்க திட்டமிட்டுள்ளது.மாநகராட்சியின் 28 தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 1,040 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், கூடுதலாக எருக்கஞ்சேரி, படேல் நகர், திரு.வி.க., நகர், சி.ஐ.டி., நகர், ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்ட 23 இடங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளிலும், நரசிங்கபுரம், புது காமராஜ் நகர், டிரஸ்ட் புரம் எம்.ஜி.ஆர்., நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 17 நடுநிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பாடப் பிரிவுகளை துவங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வரும் விஜயதசமி அன்று, இந்த பள்ளிகளில் ஆங்கில பாடப் பிரிவுகள் துவங்கப்படுகின்றன. இதற்கு நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில ஒப்புதல் அளிக்கப்பட்டது.