Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு நகரம் முழுவதும் சிறப்பு பள்ளி

Print PDF

தினகரன்                08.11.2010

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு நகரம் முழுவதும் சிறப்பு பள்ளி

புதுடெல்லி, நவ.8: டெல்லி பிச்சைக்காரர்களின் நலவாழ்வுக்காக மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளது. சமூக நலத்துறை கணக்குப்படி டெல்லியில் 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் சிறுவர், சிறுமியர். 69.94 சதவீதம் பேர் ஆண்கள். 30.06 சதவீதம் பேர் பெண்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்ததை ஒட்டி டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி நகரை விட்டு வெளியேற்றவில்லை என அரசு மறுத்தது. இந்நிலையில் டெல்லி பிச்சைக்காரர்களின் நலவாழ்வுக்காக புதிய சட்டம் கொண்டுவரும் பணியில் மாநில அரசு இறங்கியுள்ளது. இச் சட்டத்தின்படி நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். தங்குமிடம் தரப்படும். சில தொழிற்பயிற்சிகளையும் தர அரசு திட்டமிட்டிருக்கிறது.

பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களின் நிலை குறித்த முழுமையான விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்.

‘‘தலைநகர் பிச்சைக்காரர்களின் பிரச்னையை தீர்க்க, மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும்’’ என்று மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிச்சை எடுக்கும் பழக்கத்தை தவிர்த்து, அவர்களுக்கு புதிய வாழ்க்கை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த சட்டப்பிரிவு இயற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக நகர் முழுவதும் சிறப்பு பள்ளிகள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது