தினகரன் 25.11.2010
சேலையூர் நகராட்சி பள்ளி ரூ9 லட்சத்தில் சீரமைப்பு
தாம்பரம், நவ. 25: சேலையூரில் உள்ள தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 285 மாணவ& மாணவிகள் படிக்கின்றனர். இங்கு நகராட்சி சார்பில் ரூ9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் விரிவு படுத்தல், மேடை, கழிவறை, டைனிங் ஹால் அமைத்தல், வகுப்பறையில் மழை நீர் கசியாமல் இருக்க சொருகுஓடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது.
சுற்றுச்சுவர் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேடை, டைனிங் ஹால் உள்ளிட்ட பணிகள் முடிந்தன. மரத்தடியில் சாப்பிடுவதால் பறவைகளின் எச்சம் விழுந்து மாணவர்கள் சிரமப்பட்டனர். டைனிங் ஹால் திறந்ததால் பிரச்னை தீர்ந்துள்ளது என்று ஆசிரியர்கள் கூறினர். டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடி யும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.