தினமணி 25.11.2010
நகராட்சிப் பள்ளியின் அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்
விழுப்புரம்
, நவ. 24: விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் தெரிவித்தார்.பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்
176 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது: ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆட்சியில்தான் நிவர்த்தி செய்யப்பட்டது. அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டியது இன்னும் உள்ளது
. கூடைப்பந்து ஆடுகளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இன்னும் ஓர் ஆண்டுதான் நகர்மன்றம் உள்ளது; அதற்குள் அனைத்துப் பணிகளும் செய்யப்படும்.இப்பள்ளியின் தரத்தை நாங்கள் உயர்த்திக் காட்டுகிறோம்
. நீங்கள் நன்றாகப் படித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.கற்பகமூர்த்தி தலைமை தாங்கினார், பொருளாளர் எம்.ராமதாஸ், தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.