Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ1.25 கோடி செலவில் 67 பள்ளிகளில் நூலகம் நாளை திறக்கப்படும் மேயர் தகவல்

Print PDF

தினகரன்             30.11.2010

ரூ1.25 கோடி செலவில் 67 பள்ளிகளில் நூலகம் நாளை திறக்கப்படும் மேயர் தகவல்

பூந்தமல்லி, நவ.30: ரூ1 கோடியே 25 லட்சம் செலவில் 67 சென்னை பள்ளிகளில் நூலகங்கள் நாளை திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் பாடசாலை தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நேற்று சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசியதாவது:

சென்னை பள்ளிகள், தனியார் பள்ளிக்கு இணையாக கட்டிட வசதி, சுத்தமான குடிநீர், உயர்தர கல்வி என சிறப்பான கல்வியை அளித்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி 67 சென்னை பள்ளிகளில் நூலகம் தொடங்கப்படுகிறது. இதற்காக புத்தகங்களை வாங்க, ரூ1 கோடியே 25 லட்சத்தை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. ஒரு நூலகத்துக்கு 2,500 முதல் 3 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்படும்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் பழம், ரொட்டி வழங்கப்பட்டது. இது சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், இந்தாண்டு முதல் பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ49 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் அபாக்ஸ் என்ற சீன கணக்கு முறை கல்வி கற்றுத்தரப்படும். இவ்வாறு மேயர் கூறினார். விழாவில், மாநகராட்சி துணை மேயர் சத்தியபாமா, கல்வித்துறை துணை ஆணையர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.