தினகரன் 06.12.2010
மாநில யோகா போட்டி சங்கரன்கோவில் நகராட்சி பள்ளி 3வது இடம்சங்கரன்கோவில், டிச.6: மாநிலஅளவில் நடந்த யோகா போட்டியில் சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 3வது இடம் பிடித்துள்ளனர்.
நெல்லை மாவட்ட யோகா வளர்ச்சி கழகத்தின் சார்பில் மேலகரத்தில்
28வது மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சங்கரன்கோவில் கிருஷ்ணசாமிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 3வது இடம் பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி மாணவர்கள் ஆஸிக்ராசா, அம்ரோஸ் ஆகியோர் சிறப்பு வகை யோகா போட்டி யில் 3வது இடம்பெற்று பதக்கம் மற்றும் சான்றுகளை பெற்றனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், யோகா பயிற்சியாளர் ராசா மற்றும் ஆசிரியர்கள், கிராம கல்வி குழு நிர்வாகிகள் பாராட்டினார்கள்.