Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவிலில் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு சீல்

Print PDF

தினகரன்               07.12.2010

நாகர்கோவிலில் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு சீல்

நாகர்கோவில், டிச. 7: நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2007ம் ஆண்டு கான்பரன்ஸ் ஹால், மற்றும் டைனிங்ஹால் ஆகியவை கட்டப்பட்டன.

இந்த கட்டிடத்திற்கு நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி அளித்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமத்திற்கு செலுத்த வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணம் செலுத்தவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று நாகர்கோவில் உள்ளூர் குழும உதவி இயக்குநர் ஈஸ்வரன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் நாகேஸ்வரி, அம்பிகா, வரைவாளர் வரதராஜன் ஆகியோர் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.