Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளுக்கு 100 இலவச கம்ப்யூட்டர்கள்

Print PDF

தினமலர்      07.01.2011

மாநகராட்சி பள்ளிகளுக்கு 100 இலவச கம்ப்யூட்டர்கள்

மதுரை : மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளுக்கு ஐ.பி.எம்., நிறுவனம் சார்பில் 100 இலவச கம்ப்யூட்டர்கள் வழங்குவதற்கான ஒப்பந்தம் மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:ஐ.பி.எம்., கம்ப்யூட்டர் நிறுவனம் தனது லாபத்தின் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்கிறது. மதுரை மாநகராட்சியிலுள்ள 20 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக 100 கம்ப்யூட்டர்களையும், அதற்கான பாடதிட்ட மென்பொருட்கள், மேசை, நாற்காலிகள் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்காக 20 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. விரைவில் இந்த கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும், என்றார்.

ஒப்பந்தத்தில் ஐ.பி.எம்., நிறுவன முதன்மை அலுவலர் பிரின்ஸ் நெகேமியா, கமிஷனர் செபாஸ்டின் கையெழுத்திட்டனர். மாநகராட்சி துணைமேயர் மன்னன், மண்டல தலைவர் இசக்கிமுத்து, ஆத்மா நிறுவன செயல் இயக்குனர் ஞானசம்பந்தன், மாணிக்கம், மாநகராட்சி கல்வி அலுவலர் வைத்தியநாதன் பங்கேற்றனர்.