தினமலர் 27.07.2012
பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: 3 மாநகராட்சி பள்ளிகளுக்கு ரொக்க பரிசு
சென்னை : அரசு பொதுத்தேர்வில், முழு தேர்ச்சி பெற்ற மூன்று மாநகராட்சி பள்ளிகளுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெறும் பள்ளிக்கு, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என, மாநகராட்சி அறிவித்திருந்தது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், நெசப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்புத் தேர்வில், மயிலாப்பூர் கே.பி.தெரு உயர்நிலைப் பள்ளி, கண்ணம்மா பேட்டை உயர்நிலைப் பள்ளி என, மூன்று பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றன.இந்த பள்ளிகளுக்கு, தலா ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதற்கு மன்றத்தில், அனுமதி அளிக்கப்பட்டது.