Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் இலவச "லேப் டாப்' வழங்கல்

Print PDF

தினமலர்           12.08.2012

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் இலவச "லேப் டாப்' வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சண்முகம் லேப் டாப்களை வழங்கினார். விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளியில் இலவச லேப் டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., (பொறுப்பு) ஜோசப்அந்தோணிராஜ் வரவேற்றார். நகர சேர்மன் பாஸ்கரன், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, ஆர்.டி.ஓ., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சண்முகம் பங்கேற்று, நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்கள் 345 பேருக்கும், கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் 262 பேருக்கும், என மொத்தம் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச லேப் டாப்களை வழங்கி பேசினார். தொடர்ந்து நாடக மன்ற அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத், நகர மன்ற கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, ராமச்சந்திரன், சக்திவேல், அபிராமன், அ.தி.மு.க., தொகுதி செயலர் மூர்த்தி, எம்.ஜி.ஆர்., மன்றம் ஜானகிராமன், திருப்பதி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Last Updated on Monday, 13 August 2012 06:26