Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

Print PDF

தினமணி             13.08.2012

கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

களியக்காவிளை, ஆக. 12:÷களியக்காவிளை பேரூராட்சியில் நகர்ப்புற ஏழைமக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்தும் திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ், கணினிப் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

.÷இத்திட்டத்துக்காக இப்பேரூராட்சிக்கு தமிழக அரசு ரூ. 2,06,900 ஒதுக்கீடு செய்திருந்தது. இதன் மூலம் 26 மாணவிகள் கணினி பயிற்சி பெற்று வந்தனர்.

÷பயிற்சி முடித்த இம்மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் டி.ஆர். ஆஷாடயானா மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

÷நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.சுதீர்குமார், வார்டு உறுப்பினர்கள் விஜயகுமாரி, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயலர் கே.ஜி. உதயகுமார், சரிதாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.என். தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.