Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆர்வமுடன் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

Print PDF

தினமணி             25.08.2012

ஆர்வமுடன் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

புது தில்லி, ஆக. 24: வடக்குத் தில்லி மாநகராட்சியின் கல்வித் துறை, அனைத்து வட்ட வளர்ச்சிக்கான சொûஸட்டி (எஸ்.ஏ.ஆர்.டி.) ஆகியவை இணைந்து சிவிக் சென்டர் வளாகத்தில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை வியாழக்கிழமை நடத்தின.அதில் என்.டி.எம்.சி. முனிசிபல் பள்ளிகளைச் சேர்ந்த 128 மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் மீரா அகர்வால், "வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள "பிரபோதினி' எனும் மாணவர்களுக்கான ஓவியங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டி, மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்காக அமைந்துள்ளது.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் திறமை மிக்கவர்கள் என்பதற்கு அவர்கள் வரைந்துள்ள இந்த ஓவியங்களே சான்று' என்றார்.போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மேயர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் யோகேந்தர் சந்தாலியா, துணைத் தலைவர் விஜய் பிரகாஷ் பாண்டே, கல்விக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.