தினகரன் 20.04.2013
லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி , காலணிகள்
கோவை: அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கும் விழா நேற்று மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. கோவை கல்வி மாவட்டத்தில் 96 ஆயிரத்து 954 கணித உபகரண பெட்டிகள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 468 கணித உபகரண பெட்டிகள் வழங்கப்பட்டது.
மேலும் கோவையில் 90 ஆயிரத்து 250 காலணிகள் மற்றும் பொள்ளாச்சியில் 27 ஆயிரத்து 468 காலணிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோவை மாநகர மேயர் வேலுசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் கணித உபகரண பெட்டிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பேசுகையில்:
கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 500 பேருக்கு பிளஸ் 2வில் மடிக்கணினி வழங்கப்பட்டது. கஞ்சம் பட்டி போன்ற பகுதிகளில் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றார்.
லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி , காலணிகள்
கோவை: அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கும் விழா நேற்று மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. கோவை கல்வி மாவட்டத்தில் 96 ஆயிரத்து 954 கணித உபகரண பெட்டிகள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 468 கணித உபகரண பெட்டிகள் வழங்கப்பட்டது.
மேலும் கோவையில் 90 ஆயிரத்து 250 காலணிகள் மற்றும் பொள்ளாச்சியில் 27 ஆயிரத்து 468 காலணிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோவை மாநகர மேயர் வேலுசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் கணித உபகரண பெட்டிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பேசுகையில்:
கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 500 பேருக்கு பிளஸ் 2வில் மடிக்கணினி வழங்கப்பட்டது. கஞ்சம் பட்டி போன்ற பகுதிகளில் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றார்.