தினத்தந்தி 11.05.2013
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் கூடியது சென்னை, கோவை பள்ளிகளை விட அதிகம்
பிளஸ்-2 தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளை பின்னுக்கு இந்த சாதனை மதுரை மாநகராட்சி படைத்து உள்ளது.
93.14 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி பள்ளிகள் 85 சதவீதமும், கோவை மாநகராட்சி 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் மதுரை மாநகராட்சி பள்ளிகள் 93.14 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து உள்ளது.
அதுமட்டுமின்றி வரலாற்றிலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
8 பள்ளிகள்
மேலும் கணித பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணக்கு பதிவியலில் 2 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று உள்ளது. மொத்தம் 14 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8 பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 11 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே போல் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் இந்தாண்டு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் 90 மாணவர்கள் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று உள்ளனர்.
பாராட்டு
சாதனை படைத்த மாணவர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் பாராட்டினர். அதுமட்டுமின்றி மேயர் தனது சொந்த நிதி வழங்கி பாராட்டினார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் கூடியது சென்னை, கோவை பள்ளிகளை விட அதிகம்
பிளஸ்-2 தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளை பின்னுக்கு இந்த சாதனை மதுரை மாநகராட்சி படைத்து உள்ளது.
93.14 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி பள்ளிகள் 85 சதவீதமும், கோவை மாநகராட்சி 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் மதுரை மாநகராட்சி பள்ளிகள் 93.14 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து உள்ளது.
அதுமட்டுமின்றி வரலாற்றிலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
8 பள்ளிகள்
மேலும் கணித பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணக்கு பதிவியலில் 2 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று உள்ளது. மொத்தம் 14 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8 பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 11 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே போல் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் இந்தாண்டு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் 90 மாணவர்கள் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று உள்ளனர்.
பாராட்டு
சாதனை படைத்த மாணவர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் பாராட்டினர். அதுமட்டுமின்றி மேயர் தனது சொந்த நிதி வழங்கி பாராட்டினார்.