தினமணி 5.11.2009
நகராட்சிப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நாகப்பட்டினம், நவ. 4: நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாகை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ந. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வீராசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.