தினமணி 23.11.2009
நகராட்சிப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயிற்சி
தேவகோட்டை, நவ. 22: தேவகோட்டை நகராட்சி 16-வது தொகுதி பள்ளியில், மனித உரிமைக்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் உதவி கல்வி அலுவலர் பரிமளம் தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் கவுன்சிலர் இளங்கோ முன்னிலை வகித்தார். மனித உரிமைக் கல்வி ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். குழந்தைக் கல்வி உரிமை குறித்து, நகரமைப்பு ஆய்வாளர் கவிஞர் நாகைநாகராஜ் பேசினார். மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. அன்புக்கனி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹேமலதா, ஞானசெüந்தரி, அன்னகுஞ்சரம் ஆகியோர் செய்தனர்.