Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1.15 கோடி ரூபாயில் அரசு பள்ளி கட்டடம்

Print PDF

தினமலர் 11.01.2010

1.15 கோடி ரூபாயில் அரசு பள்ளி கட்டடம்

வால்பாறை : வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து ஆயிரத்து 789 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து நபார்டு வங்கி மூலம் 1.15 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கியது. இந்த இடத்தில் ஒரு ஆய்வகமும், கழிப்பிடமும் கட்டப்படுகிறது. மே மாத இறுதிக்குள் இந்தப்பணி நிறைவடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 11 January 2010 10:58