தினமணி 01.02.2010
நாகை நகராட்சிப் பள்ளியில் விழிப்புணர்வுப் போட்டிகள்
கப்பட்டினம், ஜன. 31: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட தேசிய பசுமைப் படை ஆகியவற்றின் சார்பில் நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டி, வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் பன்னீர்செல்வம், போட்டிகளைத் தொடக்கிவைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. ரங்கராஜ் தலைமை வகித்தார்.
உதவித் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். தணிக்கையாளர் குமரவேல், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.