தினமணி 16.02.2010
கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
கம்பம், பிப். 15: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்குச் சொந்தமான 6 பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் நகராட்சி நிதி ஒதுக்குவதாகவும் நகராட்சி தலைவர் அம்பிகா பாண்டியன் தெரிவித்தார்.
கம்பத்திலுள்ள தேரடி, மைதீன் ஆண்டவர் பள்ளி, சுங்கம் பள்ளி உள்பட 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளிகளுக்கு கல்வி நிதியைப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கம்பத்திலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர், மாணவ, மாணவியருக்குத் தனித்தனி கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
புதிதாக அனைத்து வசதிகளும் நிறைந்த கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை நகராட்சி மைதீன் ஆண்டவர் பள்ளியில் ரூ.14 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தையும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கம்பம் நகர்மன்றத் தலைவர் அம்பிகா பாண்டியன் கூறியதாவது: கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் அனைத்து வசதிகளைஉம் செய்து வருகிறோம்.
கல்விக்காக நகராட்சி மூலம் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் செலவிட முடிவு செய்து பணிபுரிந்து வருகிறோம் என்றார்.