தினமலர் 24.02.2010
நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
கடலூர்: சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முதுநகர் நகராட்சி நடுநிலைப் பள் ளிக்கு தண்ணீர் தூய் மைப்படுத்தும் இயந்திரம் வழங்கப்பட் டது. கடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார் பில் கடலூர் முதுநகர் சுண் ணாம்புகாரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் தூய்மைப்படுத்தும் இயந் திரம் வழங்கும் விழா நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், கவுன்சிலர் செந்தில், உதவி ஆளு னர் தாயுமானவன், பிறையோன், ராசன், உதயகுமார், தலைமை ஆசிரியர் குமாரவேல், ஆசிரியர்கள் புஷ்பகுளோரியா, பாரதி, உஷாராணி, மங்கலம், லதா உட்பட பலர் பங்கேற்றனர்.