தினமலர் 05.03.2010
ரூ.13.50 லட்சத்தில் பள்ளிக்கு வகுப்பறை
திருப்பூர் : தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, 13.50 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.தென்னம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணிக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 13.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் ரத்தினசாமி, தலைமை ஆசிரியை தனலட்சுமி, பெற்றோர் ஆசிரிய கழக செயலாளர் பொன்னுசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.