தினமலர் 11.03.2010
நகராட்சி பள்ளி ஆண்டு விழா
ஆரணி: நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகர கல்விக் குழு தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் உட்பட பல போட்டிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மணிவாசகம், அன்பழகன், பாலசுந்தரம், ஜெகதீசன் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.